Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST
குருவின் தேவை ஒரு ஜென் துறவிக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.

ஒரு சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.

மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி அதைக் கண்டுகொள்ளவில்லை.

உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.

அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:

"சீடர்களே நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப் பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித் தருவார்கள்?"

அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் அதன் பிறகு அவர் திருடவேயில்லை.



Get it on Google Play